Thursday, September 22, 2016

மத்திய கால மெய்யியல்

மத்திய கால மெய்யியல் என்பது சுமார் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் மேற்கு உரோமைப் பேரரசுவீழ்ச்சியில் இருந்து 16 ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சி வரையான நடுக் கால மெய்யியல் ஆகும். மத்திய கால மெய்யியல் 8 ஆம் நூற்றாண்டு மத்தியில் பகுதாதுவிலும் 8 ஆம் நூற்றாண்டு கடைசிப் பகுதியில் சார்லமேன் நாடோடி அவையிலும் பிரான்சில் ஆரம்பமாகியது.[1] மரபார்ந்த காலகிரேக்கத்திலும் உரோமிலும் ஏற்பட்ட பண்டைய கலாச்சார வளர்ச்சியை மீளவும் கண்டுபிடிக்கும் செயற்பாடாக பகுதியளவில் அமைந்தும், இறையியல் பிரச்சனைகளின் தேவையையை பகுதியாக வெளிக்கொணருவதாகவும், புனிதக் கோட்பாட்டுடன் சமயச் சார்பற்ற கற்றலை இணைப்பதாகவும் அமைந்தது.


கிறித்தவ மெய்யியல்


இயேசு நூல்களை எழுதினார் என்பதற்குச் சான்றுகள் இல்லை. அவரால் மெய்யியல் பற்றியோ அல்லது இறையியல் பற்றியோ எழுதினார் என்பதற்கும் சான்றுகள் இல்லை.
ஆனால், கிறித்துவின் இறப்புடன் கிறித்தவ மெய்யியல் திருத்தூதர்களால் வளரத் தொடங்கியது. யூத உரோம குடிமகனான திருத்தூதர் பவுல் திருமுகங்களையும் மடல்களையும் ஆரம்ப கிறித்தவ திருச்சபைக்கு எழுதினார். இது போதனையாகவும் இறையியலாகவும் இருந்தது. சில இடங்களில், அவர் காலத்து பிரபல்யம் பெற்ற (குறைகூறல், ஐயவாதம், உறுதிப்பாட்டுவாதம்) மெய்யியலாளர்கள் போன்று செயற்பட்டார். திருத்தூதர் பணிகள் என்ற விவிலிய நூலில் பவுல் கிரேக்க மெய்யியலாளர்களுடன் நடத்திய உரையாடல் மற்றும் விவாதம் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. இது திருமுகங்களிலும் பிரதிபலிக்கிறது. எ.கா: "போலி மெய்யியலாலும் வீணான ஏமாற்றுப் பேச்சாலும் உங்களை யாரும் கவர்ந்துகொள்ள விடாதீர்கள். அவருடைய திருமுகங்கள் பிற்கால கிறித்தவ மெய்யியலுக்கு குறிப்பிடத்தக்க மூலமாக மாறியது.

யூத மெய்யியல்


யூத மெய்யியல் அல்லது யூதத் தத்துவம் (Jewish philosophyஎபிரேயம்פילוסופיה יהודית‎) என்பது யூத சமயத்துடன் தொடர்புபட்ட அல்லதுயூதர்களால் நிறைவேற்றப்படும் சகல மெய்யியல்களையும் குறிக்கும்.[1] தற்கால யூத அறிவொளி மற்றும் யூத விடுதலை வரை, யூத மெய்யியலானது ராபி (போதக) யூதப் பாரம்பரியத்தினுள் ஒத்திசைவான புதிய கருத்துக்கள் சரிசெய்யும் முயற்சிகளுக்குத் தடையாகவிருந்தது. இதனால் ஒழுங்கமைக்கப்பட்ட உடனடிக் கருத்துக்கள் தனித்துவமாக யூத அறிஞர் கட்டமைப்பு மற்றும் உலக பார்வைக்கு அவசியமில்லை என்றாகியது. தற்கால சமுதாயத்தின் ஏற்றுக்கொள்ளலுடன், யூதர் உலகியல்சார் கல்விகளை உள்வாங்கி அல்லது உலகின் அவசியத்தை சந்திக்கத்தக்க முற்றிலும் புதிய மெய்யியல்களை அவர்களாகவே தற்போது கண்டுகொண்டு வளரச் செய்துள்ளனர்.

1 comment: