Monday, June 27, 2016

அறிவாராய்ச்சியியலில் ஏற்புடைய அறிவை பெறுவதில் நம்பிக்கையின் வகிபாகத்தை விளக்குக?

நம்பிக்கை என்ற கருத்து மாறுபட்ட அர்த்தங்களை உடையது. எடுத்துகாட்டாக, ஒரு குறிப்பிட்ட விடயம் பற்றிய நம்பிக்கை ஆத்திகர்களுக்கு ஒரு விதமாகவும், நாத்திகர்களுக்கு இன்னொரு விதமாகவும், ஐயவாதிகளுக்கு வேறொரு விதமாகவும் இருக்கும். இதனை இன்னும் கூறுவதானால் ஓர் ஆத்திகன் கடவுள் நம்பிக்கை உடையவன், நாத்திகன் கடவுள் நம்பிக்கை அற்றவனாகவும், ஒரு ஐயவாதி இந்த இரண்டு கருத்துகளையும் நம்பாதவனாகவும் இருப்பான். ஆக இங்கு ஒரு சாராரின் கருத்து இன்னொரு சாராரின் கருத்துடன் முரண்பாடுவதை அறியலாம். இங்கு முன்வைக்கப்பட்டுள்ள கூற்று 'கடவுள் இருக்கிறார்' என்பதாகும். ஆகவே ஒருவர் எதை நம்புகின்றாரோ அது கூற்றாகின்றது. இங்கு கூற்று என்பது நம்பிக்கைக்குரிய ஒரு வகையான பொருள் என்று கூறலாம். மேற்கூறிய கருத்துக்களின் படி நம்பிக்கை என்ற கருத்தை ஏற்றுக்கொள், ஏற்றல் என்ற கருத்துக்கு மாற்றுவது புரிதலுக்கு இலகுவாக இருக்கும். ஒரு கூற்றைப் பற்றிய ஒருவருடைய நம்பிக்கை ஏற்றுக்கொள்ளல் என்று கூறப்படும். இதிலிருந்து ஒரு கூற்றை ஒருவர் ஏற்றுக் கொள்கிறார். மற்றொருவர் மறுக்கிறார் இன்னொருவர் ஏற்றல் மறுத்தலுக்கு அப்பால் நிற்கிறார் என்றும் கொள்ளலாம். ஆக ஒருவன் ஒரு கூற்றை நிராகரித்து விடுவது அதில் நம்பிக்கை இல்லை என்று பொருள் கொள்ளப்படுகிறது. எனவே ஏற்புடைய அறிவை பெறுவதில் நம்பிக்கைக்கு சிறப்பிடம் வழங்கப்படுகிறது.

நம்புவதால் மட்டுமே ஒரு விடயம் அறிவாக முடியாது. அது உண்மையாகவும் இருக்க வேண்டும். பூமி தட்டையானதாக எவரும் அறிந்ததில்லை ஆனால் ஒரு காலத்தில் பெருந்தொகையான மக்கள் பூமி தட்டையானது என நம்பினர். ஆனால் அது தவறானது நம்பிக்கையோடு அது உண்மையாகவும் இருக்க வேண்டும். அதாவது நம்பிக்கையும் உண்மையும் அறிவின் இன்றியமையாத கூறுகள். ஏற்புடைய அறிவை பெறுவதில் நம்பிக்கை என்ற விடயத்தில் உண்மை அவசியமான காரணியாக காணப்படுகின்றது.

நம்பிக்கை என்பது மனிதனின் சிந்தனை கட்டமைப்பின் உணர்வு நிலை வடிவத்தின் அங்கமாகும். அறிதல் முறையின் ஒரு நிலையாகவே நம்பிக்கை விளங்குகிறது. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் ஏற்படும் மனித உறவுகளும், மனிதனுக்கும்- மனிதனுக்கம் இடையில் ஏற்படும் சமூக உறவுகளும் மனித முயற்சியால் மாற்றங்களுக்கு உள்ளாவதை வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது. இந்த மாற்றங்களின் ஒரு குறிப்பிட்ட கட்டத்து மனிதனின் தத்துவார்த்த தலையீடாக நம்பிக்கை விளங்குகிறது

நம்பிக்கை நிரூபக்கப்பட்டு உறுதி செய்யப்படும் போது அது அறிவாக மாறுகிறது. நிரூபிக்கப்படாதவை மூடநம்பிக்கை அல்லது போலியாக மாறும் அது மட்டுமல்லாமல் விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்டவை மட்டுமே உண்மையாகும். அறிவிக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான வேறுபாட்டை முதன் முதலில் எடுத்துரைத்தவர் பிளேட்டோவாகும். இவ்வகையில் இன்றியமையாதன அல்லாத உண்மைகளை அறிந்து கொள்ள எத்தனிப்பது நம்பிக்கை என்றும் குறிப்பிட்டார். எனவே ஏற்புடைய அறிவை பெறுவதற்கு நம்பிக்கை அவசியமாகும். பிளேட்டோ உலகை கருத்துலகு தோற்றப்பாட்டுலகு என இரண்டு வகையாகப் பிரித்து விளக்கினார். இருப்புடையனவற்றை இருப்புடைய கருத்துகளாக கொண்ட உண்மையான உலகாகவும், வௌ;வேறான புலனுணர்வு பொருட்களைக் கொண்ட உலகை தோற்றப்பாட்டுலகாகவும் இரண்டாக பிரித்து விளக்கினர். இதில் கருத்துலகை மனிதனின் அறியும் முறை நம்பிக்கை என்றும் அவர் எடுத்துக் கூறினார். எனவே இரண்டு உலகையும் மனிதன் அறிவதற்கு அறிவும் நம்பிக்கை அவசியமாகின்றது.

நிச்சயமான முறைகளை அறியும் முறை அறிவு என்றும் நிச்சயமற்றவற்றை அறிவது நம்பிக்கை என்றும் பிளேட்டோவின் வழியில் கூறலாம். இக்கருத்து இன்று ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை. ஏனெனில் சிலரால் அறியப்படும் எடுப்புக்கள் மற்றவரால் நம்பப்படுகின்றது. எடுத்துக்காட்டாக ஒரு கணிதவியல் அறிஞர் நிரூபித்த எடுப்பு அல்லது வாய்ப்பாடு அந்த கணித அறிஞர் கண்ட உண்மை அல்லது அறிவாகும். அதனை ஏற்றுக்கொள்ளும் போது மற்றவர்கள் செய்வது நம்பிக்கையாகும். எனவே இங்கு அறிவினதும் நம்பிக்கையினதும் உள்பொருள் வேறுபட்டதல்ல எனலாம். பாரம்பரிய மெய்யியலாளர்கள் கருத்துப்படி அனுபத்திற்கு முந்தியவை அறிவு என்றும். அனுபவத்தின் பின்னால் வருவது நம்பிக்கை என்றும் எடுத்து காட்டியுள்ளனர். முன்னையது ஏதுவானது நிச்சயமானது என்றும், பின்னையது ஏதுவானது நம்பிக்கை என்றும் கூறப்பட்டது. இ;க்கருத்தை பின்வருவாறு கூறலாம் உய்த்தறி முறை அறிவு என்றும் தொகுத்தறி முறை நம்பிக்கை என்றும் வேறுபடுத்தலாம். (கேசவன்,1998,10) pப. 3டேக்கார்ட் கருத்துப்படி 'நான் சிந்திக்கிறேன்' ஆகவே நான் இருக்கின்றேன் என்ற கூற்று முன்னையது ஏதுவான பகுப்புக் கூற்றாகும். இதனை உறுதியான, கட்டாயமான உண்மை எனக் கூறினார். மேலும் டேக்கார்ட் தெளிவானதும் உறுதித்தன்மையுடையதுமான அறிவு அளவையியலிலும் கணிதத்திலும் பெறக்கூடியது என்று கூறினார். அதே சமயம் டேக்கார்ட் உட்பட்ட அறிவு முதல்வாதிகளின் கருத்துகளை மறுத்தலித்த அனுபவவாதிகள் அறிவு என்பது புலன்கள் மூலம்தான் பெற முடியும் என்றும் அது பின்னையது ஏதுவான அறிவு என்றும் தொகுத்தறி முறை என்றும் எடுத்துக்கூறினார். இந்த கருத்து அறிவு பற்றிய பாரம்பரியக்கருத்திலிருந்து வேறுபட்டதாகும்.
வூஸ்லி என்பவரின் கருத்துப்படி அறிதல் எனும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் கொடுக்கப்படலாம். அதே சமயம் அறிவை ஒரு திட்ட வட்டமான முறைக்குள் கொண்டு வரும் ஆய்வை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக, பின்னையது ஏதுவான தொகுப்பெடுப்புக்கள் பொய்பிக்க முடியாதவைகளாகும். எடுத்துக்காட்டாக, 'காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்' என்பது தொகுத்தறிவாகும். எனினும் இக்கருத்தை பொய்பிக்க முடியுமா? இது ஒரு உண்மை. இத்தகைய கருத்துக்களை முன்வைத்த வூஸ்லி அறிவு நம்பிக்கைகளை வேறு பிரித்துப் பார்க்கும் முயற்சிகள் அர்த்தமுள்ளதாக அமையாத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றார்.
பயன்வழிக்கொள்கையினருள் ஒருவரான ஜே.எஸ்.மில் என்பார் அறிவுக்கும் நம்பிக்கைக்குமிடையிலான வேறுபாட்டைக் கூறும் போது அவரும் ஒரு பொதுவான கருத்தைத் தருவதை அறியலாம். பூரண உறுதித் தன்மையுடையது அறிவு என்றும் பூரண உறுதித்தன்மையற்றது நம்பிக்கை என்றும் கூறினார். இதை இன்னொரு வகையில் கூறுவதானால் அத்தகைய சான்றுகளினால் நம்பிக்கை ஏற்படுகிறது. நிச்சயதன்மையுடைய சான்றுகளிலிருந்து கிடைப்பதுதான் அறிவு என அவர் குறிப்பிடுகின்றார். சுpல நம்பிக்கைகள் அறிவாகும் என்பது அவரது கருத்தாகும். போதிய உறுதியளிக்கக்கூடிய சான்றுகளில் அமைக்கப்பட்ட நம்பிக்கை அறிவாகும் என்பது அவரது மற்றொரு கருத்தாகும். பயன்நலாதிகளில் முதன்மையானவரான வில்லியம்ஸ் ஜேம்ஸ் என்பார் பூரண உறுதித்தன்மை என்பது அறிவையும் நம்பிக்கையும் வேறுபடுத்த சரியான முறையா என வினவுகின்றார். ஏனெனில், பூரண உறுதித்தன்மை என்ற மனப்பான்மை நம்பிக்கையிலும் இருக்கலாம் என வாதிடுகின்றார். இக் கருத்தையும் சிலர் ஏற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சிலர் சான்றுகளைக் கொண்டும் அறிவையும் நம்பிக்கையும் வேறுபடுத்தலாம் என்று கூறுகின்றனர். நிச்சயத்தன்மை வாய்ந்த சான்றுகளால் அமைந்தது அறிவு. அதாவது, எவ்வளவு தூரம் சான்றுகள் அதிகமாகவுள்ளனவோ அது அறிவு என்றும் சான்றுகள் குறைந்தது நம்பிக்கை என்றும் இந்தக்கருத்தை ஆதரிப்போர் கூறுகின்றனர். இங்கும் பிரச்சினைதான் எழுகின்றது. ஏனெனில் பொய்யான ஒரு கருத்தை ஒருவரால் நம்ப முடியும். ஆனால் அறிய முடியாது.

ஆகவே நம்பிக்கை;கு பாத்திரமாகும் ஒரு விடயம் ஒன்றில் உண்மை அல்லது பொய்யாகவே இருக்கலாம். ஆனால், அறிவின் பொருள் உண்மையான ஒன்றை பற்றியதாகவே இருக்க வேண்டும். இங்கு எழும் மற்றோர் பிரச்சினை உண்மை என்றால் என்ன என்பது, ஏனெனில், காலத்துக்கு காலம் முன்வைக்கப்படும் கருத்துக்கள் அக்காலத்துக்குரிய உண்மையாகும். ஒரு காலத்தில் பூமி தட்டையானது என்று சமய ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் பூமி உருண்டையானது என்று கண்டறியப்பட்டதும் முன்னைய கருத்து பொய்யாகிறது. இவ்வாறே, தொலமியின் புவி மையக் கொள்கையை நிராகரித்தமையாலேயே கொப்பநிக்கஸின் சூரிய மையக் கொள்கை சாத்தியமாயிற்று. காலம்-வெளி பற்றிய நியூட்டனின் கருத்து நிராகரிக்கப்பட்டதாலேயே சாhபுக் கொள்கை கண்டு பிடிக்கப்பட்டது. இக்கொள்கைகள் அறுதியாக நிறுவப்பட்ட உண்மைகள் என விஞ்ஞானங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் விஞ்ஞானம் முன்னேறியிருக்க முடியாது. பழைய கொள்கைகள் நிராகரிக்கப்பட்டமையாலேயே புதிய கொள்கைகள் முன்மொழியப்பட்டன. இதன்படி இன்று நம்பகத்தன்மையை இழந்து விடலாம். இதனிடத்தைப் புதியதொரு விஞ்ஞான விளக்கம் பெறலாம். இதுவே 'தவறுகளைக் களைவதன் மூலம் விஞ்ஞான முன்னேறுகிறது' என்பார் கார்ள் பொப்பர்.

எனவே சில சமயங்களில் அறிவு பொய்யாகலாம். இக்கருத்து அறிவு பொய்யாகின்றது என்று சொல்லத் தேவையில்லை. ஒரு காலத்தில் அறிவாக ஏற்றறு அதாவது, நம்பியது இன்னொரு காலத்தில் பொய்யாக்கப்படுகின்றது. உண்மையில் அறிவு பொய்யாக்கப் படவில்லை அறிவு என்று ஏற்ற அல்லது நம்பிய விடயம் பொய்யாகின்றது. எனவே அதனை போலி அறிவு என்று ஒரு கருத்தில் கூறலாம். உண்மையில் அறிவு ஒரு காலமும் பொய்யாவதில்லை. அறிவு என்பது ஒரு காலத்திலும் பொய்பிக்க முடியாதது. அத்துடன் உண்மையை அறிவதில் கருத்து கொள்ளுதல், நம்பிக்கை கொள்ளுதல் போன்றவை புறநிலை மீதான மனிதனின் அகவயப்பட்ட சிந்தனையே ஆகும். இந்த நம்பிக்கை அகவய நிலையில் போதுமானதாக இருக்கலாம். ஆனால் புறவயநிலையில் போதுமானதல்ல. அறிவுதான் அகவய நிலைக்கும் புறவய நிலைக்கும் போதுமானது என்ற காண்டின் கருத்தும் மனங் கொள்ளத்தக்கது. 

அறிவாராய்ச்சியியலில் இப்பிரச்சினைக்கு அறிவு, அறியும் விடயம் என்றும் அறிவுக்கும் நம்பிக்கைக்குமிடையில் அவற்றின் அளவுகளில் வித்தியாசம் உண்டு என்றும் அறிவையும் நம்பிக்கையையும் வேறுபடுத்திப் பார்ப்பது ஒரு கடினமான காரியம் என்பதையும் தீர்வாகக் கொள்ளலாம். ஏனவே ஏற்புடைய அறிவை பெறுவதில் நம்பிக்கையின் வகிபாகம் முக்கியம் பெறுகின்றது.

No comments:

Post a Comment