மெய்யியல் எனும் பதமானது ஆங்கிலத்தில் (Philosophy) பிலோசபி என அழைக்கப்படும். பிலோசபி எனும் சொல்லானது Sophia எனும் கிரேக்க சொல்லில் இருந்து உருவானதாகும். Sophia எனும் பதமானது டுழஎந Love of wisdom எனப் பொருள்படும். இது மெய் அறிவைத்தேடு அல்லது மெய் அறிவைநேசி எனப்பொருள்படும். இத்தகைய மெய்யியல் துறையில் விஞ்ஞானம் என்னும் துறையும் முக்கியம் பெற்று விளங்குகிறது. விஞ்ஞானத்தில் விஞ்ஞான முறை பற்றி ஆராய்கின்ற பாடம் விஞ்ஞான முறையியல் எனப்படும். விஞ்ஞான முறை பற்றி ஆராய்பவர் விஞ்ஞான முறையியலாளர் ஆவர். காள்பொப்பர் ஒரு விஞ்ஞான முறையியலாளர். விஞ்ஞான முறையியல் பிரிவுகளாக உய்த்தறி முறையியல், தொகுத்தறி முறையியல் என்பன காணப்படுகின்றது.
உய்த்தறி முறையியல் என்னும் போது தரவுகளில் இருந்து நியாய வடிவத்தை பயப்படுத்தி உட்கிடையாக இருக்கும் ஒன்றினை முடிவாகப்பெறும் அனுமானம் உய்த்தறி முறையியல் எனப்படும்.
உதாரணம்:- எல்லா இரும்புகளும் துருப்பிடிப்பன ஆகும்
X ஒரு இரும்பு ஆகவே X உம் துருப்பிடிக்கும்.
உய்த்தறி முறையியல் பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கும்
முடிவை உட்கிடையாகப் பெறும்
முடிவு கூறியது கூறலாகும்
நியாய முறையைப் பயன்படுத்தும்
வாய்ப்பான அனுமானமாகும்
நிட்சயதன்மையுடையது
உய்த்தறி முயையியல் வாய்ப்பான அனுமானமாகவும், வாய்ப்பற்ற அனுமானமாகவும் அமைகின்றது. விஞ்ஞானத்தின் வாய்ப்பான உய்த்தறிவு அனுமானம் விதி உய்த்தறி முறை என்றும் வாய்ப்பற்ற உய்த்தறிவு அனுமானம் கருதுகோள் உய்த்தறிவு முறை என்று வழங்கப்படுகிறது.
கருதுகோள் உய்த்தறி முறை என்பது விஞஞானக் கருதுகோளை வாய்ப்புப் பார்த்து உண்மையா அல்லது பொய்யா எனும் முடிவை அமைக்கும் போது உய்த்தறிவு அனுமானம் பயன்படுவதே கருதுகோள் உய்த்தறிவு முறை எனப்படும். இதனால் தான் உய்த்தறி முறை கருதுகோளில் இருந்து உருவாகின்றது எனக் கூறப்படுகின்றது.
விதி உய்த்தறி விளக்கமுறை என்பது பொது விதி அல்லது பொதுவிதிகளைப் பேரெடு கூற்றாகவும் விசேட காரணி அல்லது விசேட காரணிகளை சிற்றெடு கூற்றாகவும் கொண்டு உய்த்தறிவு வாத அடிப்படையில் தனிப்பட்ட நேர்வுகளை விளக்கும் ஒரு முறையே விதி உய்த்தறி விளக்க முறை எனப்படும்.
இத்தகைய முறையில் உய்த்தறி முறையியல் பற்றி சுருக்கமாக கூறலாம். உய்த்தறி முறையியலில் குறைபாடுகள் சிலவும் காணப்பட்டுள்ளது என்பது சுட்டி காட்ப்பட வேண்டிய ஒன்றாகும்.
விஞ்ஞான முறையியலில் இடம் பெறும் தொகுத்தறி முறையியலை பற்றி நேக்கலாம். தொகுத்தறி அனுமானம் என்பது அவதானிக்கப்பட்ட பல தனிப்பட்ட உண்மைகள் அல்லது நேர்வுகளில் இருந்து பொதுமுடிவைப் பெறும் ஓர் முறையே தொகுத்தறி அனுமானம் எனப்படும்.
இதனால் தான் தொகுத்தறி முறை நோக்கலில் இருந்து ஆரம்பிக்கின்றது எனக் கூறப்படுகின்றது. உண்மையான எடுகூற்றுக்களில் இருந்து நிகழ்தகவுடைய முடிவைப்பெறும் அனுமானம். தொகுத்தறி அனுமானம் எனப்படும் தொகுத்தறிவுவாதிகளின் கருத்துப்படி தொகுத்தறிவு அனுமானத்தின் வடிவம் பின்வருமாறு அமையும்.
உதாரணம்:- (01)
நேர்வு - 1
நேர்வு – 2
நேர்வு – 3
தொகுத்தறிவுத்தாவுதல்
ஃ பொது முடிவு
உதாரணம்:- (02)
X என்ற இரும்பு துருப்பிடித்தது.
Y என்ற இரும்பு துருப்பிடித்தது.
Z என்ற இரும்பு துருப்பிடித்தது.
ஃ எல்லா இரும்புகளும் துருப்பிடிக்கலாம்.
தொகுத்தறி அனுமானமானது பின்வரும் பண்புகளை கொண்டிருக்கின்றது
வேறு ஒரு தரவை முடிவாகப் பெறும்
முடிவு புதிய கண்டு;பிடிப்பாக இருக்கும்
தொகுத்தறிவுத்தாவுதலைப் பயன்படுத்தும்
வாய்ப்பற்ற அனுமானம்
அறிவு நிகழ்தகவுடையது
தொகுத்தறி அனுமானமானது பின்வரும் படிமுறைகளைக் கொண்டிருக்கும்
நேர்வுகளை நோக்குதல்
கருதுகோள் அமைத்தல்
கருதுகோளில் இருந்து விளைவுகளை உய்த்தறிதல்
கருதுகோளை விளைவுகளோடு ஒப்பிட்டு வாய்ப்புப் பார்த்து. அது நிறை இயல்புடையதாக இருந்தால் விதியாக அல்லது கொள்கையாக அமைத்தல்
தொகுத்தறி அனுமானம் இரண்டு வகையில் காணப்படுகின்றது அவையாவன கருதுகோள் தொகுத்தறி அனுமானம், விதி கொள்கை தொகுத்தறி அனுமானம் என்பனவாகும். கருதுகோள் தொகுத்தறி அனுமானம் என்பது விஞ்ஞானத்தில் கருதுகோள் அமைக்கும் போது தொகுத்தறி அனுமானம் பயன்படுவதே கருதுகோள் தொகுத்தறி அனுமானம் எனப்படும்.
உதாரணம் வடிவம்:
P_1
P_2 தனிப்பட்ட நேர்வு அவதானிக்கப் படுகின்றது.
P_3
ஃ H (கருதுகோள் தொகுத்தறிவு அனுமானம்)
விதி கொள்கை தொகுத்தறி அனுமானம் என்பது விதியில் இருந்து கொள்கை அமைக்கும் போது தொகுத்தறிவு அனுமானம் பயன்படுவதே விதி கொள்கை அமைப்பதில் தொகுத்தறிவு அனுமானம் எனப்படும். குறித்த நேர்வை விளக்குகின்ற ஒன்றிற்கு மேற்பட்ட விதிகள் ஒன்றிற்கொண்டு முரண்படாது இசைவுடையதாக இருக்கும் விதியில் இருந்து கொள்கை அமைக்கப்படுகின்றது. விதியைத் தரவாகக் கொண்டு கொள்கை என்ற முடிவை அமைக்க தொகுத்தறிவு அனுமானமே பயன்படுகின்றது.
வடிவம்: உதாரணம்:-
கலிலியோவின் விதி
கெப்லரின் விதி
ஃ புவியீர்ப்புக் கொள்கை
இத்தகைய முறையில் விஞ்ஞான முறையியலில் இடம் பெறும் தொகுத்தறி முறையியல் பற்றி சுருக்கமாக விளக்கலாம்.
அடுத்து விஞ்ஞான முறையியலாளர் காள்பொப்பர் என்பவரின் பொய்பித்தல் கோட்பாடு தொடர்பாக நோக்கலாம். ஒரு விஞ்ஞானி முதலில் தன் ஆய்விலிருந்து புதிய கண்டுபிடிப்பு எதையும் கண்டுபிடிப்பதற்கு பதிலாக ஏற்கனவே முன்மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகளை முறியடித்து பொய்ப்பிக்கவே செய்து வந்திருக்கிறார். நிறுவுதலுக்குப் பதிலாக நிராகத்தல் என்ற கொள்கையை வற்புறுத்தியதால் இக்கொள்கை பொய்ப்பித்தல கோட்பாடு எனப்படுகின்றனது. இதை அறிமுகப்படுத்தியவர் கார்ல பாப்பர் ஆவார். பாப்பரின் கொள்கைப்படி விஞ்ஞான விளக்கங்கள், கொள்கைகள் அனைத்தும் த்ற்காலிக ஊகங்களே ஆகும். புதிய முயற்சிகள் போது அறிவியல் உலகில் கண்ட பழையவற்றின் மீதான நம்பிக்கை இழக்க நேரிடுகின்றன. புதிய கண்டபிடுப்புகள் தோன்றும் போது, பழைய தவறுகள் களைந்து அதன் மூலம் விஞ்ஞானம் முன்னேறுகின்றது.
மரபுரீதியான விஞ்ஞான முறையானது கீழ்கண்ட முறைகளைக் கொண்டது. இந்த ஆறு முறைகளும் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து செல்வதாகும்.
1. நோக்கலும் பரிசோதனையும்
2. தொகுத்தறிவதும் பொதுமையாக்கலும்
3. கருதுகோளை வாய்ப்புப்பார்த்தல்
ஆகிய முறைகளைக் கடந்து அதன் அடிப்படையில் விஞ்ஞான அறிவு பெறப்படுகின்றது. ஆனால் அறிவியல் முறையானது முதன்முதலில் எப்போதும் ஒரு பிரச்சினையுடனேயே ஆரம்பமாகின்றது.அந்தப் பிரச்சினை வழக்கமாக ஏற்கனவே உள்ள ஒரு கொள்கையை மறுதலிப்பதாகவே இருக்கவேண்டும். அடுத்ததாக பழையக் கொள்கைக்கு பதிலாக புதிதாக முன்மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கை இடம் பெற வேண்டும். அப்புதியக் கொள்கையிலிருந்து பரிசோதிக்கக்கூடிய தரவுகளை உய்த்தறிதல் வேண்டும். அப்புதியக் கொள்கைக்கான தரவுகளை கொண்டு பழையக் கொள்கையை மறுத்தலிக்க வேண்டும். இறுதியாக, பழைய விஞ்ஞானக் கொள்கையை தீர்மானிக்கும் தீர்ப்புச் சோதனை இடம் பெற வேண்டும் என பாப்பர் தனது அறிவியல் கொள்கையை விளக்குகின்றார்.
பொய்பித்தல் கோட்பாடு தொடர்பான ஒரு எளிமையான வரைவிலக்கணத்தை நோக்கலாம். ஒரு கருதுகோளிலிருந்து உட்கிடையாக எதிர்வுகூறல் பெறப்பட்டு அனுபவச்சோதனை மூலம் பெறப்பட்ட தரவுகளுடன் எதிர்வுகூறல் பொருந்தாவிட்டால் கருதுகோள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே பொய்ப்பித்தல் கோட்பாடு ஆகும்
வடிவம் : (H→ I )
~I
ஃ ~H
அவதானம் பரிசோதனை போன்ற அனுபவ சோதனை மூலம் பொய்ப்பிக்கக் கூடிய எண்ணக்கருக்களை உள்ளடக்கிய துறைகள் விஞ்ஞானங்கள் ஆகும். கருதுகோள் அல்லது கொள்கை ஒன்றினை பொய்ப்பித்தல் கோட்பாட்டிற்கு உட்படுத்த வேண்டுமாயின் கருதுகோள் அல்லது கொள்கை கொண்டிருக்க வேண்டிய நிபந்தனைகள்
1. தெளிவான மொழிநடையிலும் கவர்பாடற்ற பதங்களாலும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்
2. ஆனுபவச்சோதனைகள் மூலம் பொய்ப்பிக்கக் கூடிய எதிர்வு கூறலை பெறுதல் வேண்டும்
3. திட்டமானதும் புலக்காட்சிக்கு உட்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்
பொய்ப்பித்தல் கோட்பாட்டில் அடங்கியுள்ள தொகுத்தறி பண்புகள்
1.முதன்மைக்காரணி, துணைக்கருதுகோள் என்பனவற்றின் துணையுடன் ஒரு கருதுகோளிலிருந்து எதிர்வுகூறலை பெறுதல் - தொகுத்தறி
2. பல பிரச்சினைகளுக்கு தீர்வாக ஒரு கருதுகோளை உருவாக்குதல் - தொகுத்தறி
3. கருதுகோளிலிருந்து பெற்ற எதிர்வு கூறலை அனுபவச்சோதனைக்கு உட்படுத்துதல் - அனுபவ முறையை பயன்படுத்துவது தொகுத்தறி
4. நிராகரிக்கப்பட்ட பல கருதுகோள் ஒரு சரியான கருதுகோளின் தோற்றத்திற்கு வழியமைத்தல் – தொகுத்தறி
இத்தகைய சிறந்த பண்புகளை கொண்ட பொய்பித்தல் கோட்பாடு அதற்கெதிரான விமர்சனங்களையும் கொண்டு காணப்படுகிறது.
பொய்பித்தல் கோட்பாடு அனுபவ விஞ்ஞானங்களுக்கு பொருந்தக் கூடியது. எனினும் அனுபவ விஞ்ஞானங்கள் எல்லா வற்றுக்கும் பொருந்தாது உதாரணம் பரிணாமக்கோட்பாடு, பொதுச்சார்புக் கோட்பாடு, வெப்ப இயக்கவிதிகள்
எல்லா விஞ்ஞானக் கொள்கைகளும் நிபந்தனை எடுப்பு வடிவில் அமைந்திருப்பது இல்லை. ஆனால் பொய்பித்தல் கோட்பாட்டின் படி கொள்கை (ர்→ஐ) அமைநடதிருக்க வேண்டும்.
விஞ்ஞானிகள் தமது கோட்பாடு பொய்ப்பிக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் முன்வைப்பதில்லை.
பொய்பித்தல் கோட்பாடு (H→I), ~I / ~H எதிர்வு கூறல் பொய் எனின் கருதுகோள் கட்டாயம் நிராகரிக்கப்படும் எனும் கட்டாய தன்மையைக் கடைப்பிடிக்கின்றது, ஆனால் விஞ்ஞான வரலாற்றிலே (H→I), ~I / ~ H எதிர்வுகூறல் பொய்யான போதும் கருதுகோள் நிராகரிக்கப்படாத சந்தர்ப்பங்களும் உண்டு. உதாரணம் நெப்ரியூன் கிரகத்தின் கண்டுபிடிப்பு ஒரு கோள் செல்லும் பாதையானது இரண்டு தன்மைகளினால் நிர்ணயிக்கப்படும்.
(1)அக் கோளினது ஓட்டவேகம் (2) ஏனைய கோள்களது ஈர்ப்புச்சக்தி
இரண்டு தன்மைகளையும் கொண்டு யுரேனெஸ் எனும் கிரகம் செல்லும் பாதை கணிதரீதியாக எதிர்வு கூறலை தொலைவு காட்டியின் மூலம் நோக்கியபோது அது எதிர்வு கூறிய பாதையின் ஊடாகச் செல்லவில்லை. ஈர்ப்புக்கோட்பாடு பொய்பித்தலுக்கு இடமளிக்கின்றது. எனினும் விஞ்ஞானிகள் ஈர்ப்புக் கோட்பாட்டைப் பொய்பிக்கப்பின் நின்றனர். ஏனெனில் முதன்மை அம்சங்களிலும், துணைக்கருதுகோளிலும் தவறு இருக்கலாம் என்பதே ஆகும். ஞாயிற்றுத்தொகுதியில் இதுவரை கண்டுப்பிடிக்கப்படாத ஒர் புதிய கிரகம் இருந்து யுரேனெஸ் செல்லும் பாதையை பாதிக்கின்றது எனக் கருதினர்.பிரித்தானியவைச் சேர்ந்த அடம்ஸ் என்பவரும் பிரான்சைச் சேர்ந்த லவேரியர் என்பவரும் யுரேனெஸ் தொடர்பாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய எதிர்வு கூறலை அமைத்தனர். பின்னர் கிரகம் இருக்கும் இடம் கணித ரீதியாக எதிர்வு கூறப்பட்டது. 1948ல் யோகான் கோல் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இவர் புதிய கிரகம் இருக்கும் இடத்தினை தொலைவு காட்டியின் மூலம் நோக்கிய போது உண்மையில் ஒர் புதிய கிரகம் இருந்தது அதற்கே நெப்ரியூன் எனும் பெயர் இடப்பட்டது. இக்கிரகம் சூரியனுக்கும் பூமிக்குமான இடைத்தூரத்தின் முப்பது மடங்கு பருமனான தூரத்தில் அவதானிக்கப்பட்டது.
பொய்பித்தல் கோட்பாடு பிழையான கொள்கைகள் உடனடியாக விலக்கப்படுகின்றது எனக் கூறப்படுகின்றது.
(அ) ஆனால் நடைமுறையில் விஞ்ஞானிகள் பிழையான கொள்கைகள் உடனடியாக விலக்குவது இல்லை
(ஆ) விலக்கப்பட்ட கொள்கைகள் மீண்டும் விஞ்ஞானத்தில் பயன்படுத்தப்படுகின்றது. உதாரணம் நுண்துகள்கொள்கை
விஞ்ஞானக் கொள்கைகள் பெறும் வடிவத்தையும் வாய்ப்புப்பார்க்கும் முறைகளையும் பொப்பரின் முறை மிகவும் எளிமைப்படுத்தி விட்டது. உண்மையில் விஞ்ஞான முன்னேற்றம் என்பது சிக்கலான முறைகளில் தான் தங்கியிருக்கின்றது.
பொய்பித்தலுக்கு தப்பிநிற்கும் கருதுகோள்களில் பொய்பிப்பது பற்றி சிந்திப்பதற்கு சிறிதளவேனும் இடமின்றிப் போகின்றது. இதற்கும் பொப்பர் எதுவிதமான விளக்கமும் தரவிரவில்லை.
இத்தகைய முறையில் காள் பொப்பருடைய பொய்பித்தல் போட்பாடு தொடர்பாக அறியக் கூடியதாக உள்ளது.
No comments:
Post a Comment