Wednesday, June 29, 2016

சைவசித்தாந்ததின் அடிப்படை எண்ணக்கருக்களை விளக்கி அதில் பதி பெறும் முக்கியத்துவத்தினை மதிப்பிடுக?

மெய்யியல் துறையில் சைவசித்தாந்தம் என்னும் விடயம் முக்கியம் பெறும் ஒன்றாக காணப்படுகிறது. சைவசித்தாந்தம் பதி(இறைவன்), பசு(உயிர்கள்), பாசம் (மலங்கள்) எனும் முப்பொருள் உண்மையை தெளிவாக விளக்குவது சைவசித்தாந்தமாகும். சைவசித்தாந்தம் என்பது வேதாகமங்களின் தெளிவு. சித்தனையின் முடிந்த முடிவு. சிவம்10சித்தாந்தம்ஸ்ரீசைவசித்தாந்தம் ஆயிற்று. கீழைத்தேயத்தில் பலகொள்கைகள் இருந்தாலும் பொதுவாக பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படுவது சைவசித்தாந்தமும் வேதாந்தமுமே இதில் பெரும் பாலோனோர் சைவசித்தாந்தத்தையே ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களை சித்தாந்திகள் என அழைக்கப்படுகின்றனர். வேதாந்தத்தை பின்பற்றுபவர்கள் வேதாந்திககள் என அழைக்கப்படுகின்றனர். சைவசித்தாந்தத்தை நோக்கு வோமானால் அங்கு பதி,பசு,பாசம் எனும் முற்பொருள் உண்மையைப் பெற்றிக்கூறுகின்றது.

பதி, பசு, பாசம் ஆகிய மூன்றையும் என்றென்றும் உள்ள நிலைத்த பொருள்களாக ஏற்றுக்கொள்வது சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படையாகும். சைவ சித்தாந்தத்தின்படி இம் மூன்றுமே முதலும் முடிவும் இல்லாதவை. இதனால் இவை மூன்றையுமே யாரும் படைத்ததில்லை என்கிறது சைவ சித்தாந்தம். ஆயினும், என்றும் நிலைத்திருக்கும் இம் மூன்றும் வௌ;வேறு இயல்புகளைக் கொண்டவை எனக்கூறும் இத் தத்துவம் இவை பற்றிப் பின்வருமாறு விளக்குகின்றது. இறைவன்: அறிவு வடிவாகவே இருக்கும் இறைவன் எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்திருப்பவன், அளவற்ற வல்லமை பெற்றவன. பசு: உயிர்கள் இயல்பாகவே அறிவுள்ளவை ஆனால் மலங்களினால் பிணிக்கப்படும்போது அவற்றின் அறிவு மறைக்கப்படுகின்றது. மலங்களின் பிணிப்பிலிருந்து தாங்களாகவே விடுபடுவதற்கு உயிர்களால் முடியாது. இறைவன் துணையுடனேயே மலங்களின் பிணைப்பிலிருந்து உயிர்கள் விடுபட முடியும். பாசம்: சடப்பொருள்கள். அறிவற்றவை. உயிர்களைப் பிணித்து அவற்றின் அறிவை மறைக்கும் வல்லமை கொண்டவை. இவை இறைவனை அடைய முடியாது. 

உலகத்தில் உள்ள பொருள்களை மூன்றாகக் காண்பது சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இதில் காட்சி அளவையின் மூலம் உயிர்கள் உள் பொருள் என்பது உணரப்படுகிறது. ஓரறிவு முதலாக ஆறறிவு வரை உள்ள உயிர்கள் அனைத்தும் கண்ணால் காணப் பெறுபவையாகும். இந்த உயிர்கள் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன. அவ்வாறு அனுபவிக்கின்ற பொழுது எல்லா உயிர்களும் ஒரே மாதிரியான இன்ப துன்பங்களை அனுபவிப்பதில்லை. எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் ஒரு பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகள் அனைவரும் ஒரே உயரமோ, ஒரே குணமோ, ஒரே நிறமோ, ஒரே அறிவோ பெற்று விளங்குவதில்லை. வௌ;வேறான குணங்களோடு, வௌ;வேறான நிறத்தோ அறிவு நிலையில்     ஏற்றத் தாழ்வோடு விளங்குகின்றார்கள். இவ்வாறு விளங்குவதற்குக் காரணம் அவர்கள் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகள்தான் என்பதை அனுமான அளவையால் உணர்கின்றோம். இவ்வாறு இரு வினைகளுக்கு ஏற்ப உயிர்களை அனுபவிக்கச் செய்பவன் இறைவன் என்று இறைவனை அனுபவித்துக் கண்டறிந்த ஞானிகளின் கூற்றுகள் உரையளவையாகத் தருகின்றன. இத்தகைய அளவைகள் மூலம் இறைவன், உயிர், பாசம் ஆகிய முப்பொருள்களின் தத்துவங்கள் சைவ சித்தாந்தத்தில் விளக்கப் படுகின்றன.

சைவசித்தாந்தத்தில் பதி அதாவது இறைவன் தொடர்பாக நோக்கலாம் சைவத்தின் இறைவன் ஒருவனே ஆவான். அவன் பதி என்று அழைக்கப் படுகின்றான். இப்பதியே சிவன் என்றும் அழைக்கப்படுகிறது. சிவம் என்ற சொல் மங்கலம் என்ற பொருளைத்தரும். எனவே நிறைவான நன்மையை உடையதாக, தீமையே இல்லாது விளங்குகின்றவன் என்ற பொருளைச் சிவன் என்ற சொல் தருகிறது. இதனைத் திருநாவுக்கரசர், 'சிவன் எனும் நாமம் தனக்கே உரிய செம்மேனி அம்மான்' எனக் குறிப்பிடுவார். இச்சிவனைக் கடவுள் என்று பொதுவாகக் குறிப்பிடுகின்ற வழக்கம் உண்டு. உலகத்தை இயக்குவதால் அவருக்கு இப்பெயர் ஆயிற்று. மற்றொரு பொருள் கடந்தவர் என்பதாகும். உலகத்துப் பொருள்கள் எல்லாவற்றையும் கடந்து மேம்பட்டவர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. மற்றொரு பொருள் உள்ளத்தைக் கடந்தவர் என்பதாகும்.    
மனிதர்களின் உள்ளத்தைக் கடந்தவர் என்பதனாலும் இப்பெயர் உண்டாயிற்று.  கடவுள் உண்டு என்பதைச் சைவசித்தாந்தம் முதற்கண் விளக்கிச் செல்கிறது.

சித்தாந்த சாத்திரங்கள் பரபக்கம் என்ற தலைப்பில் கடவுள் இல்லை என்பாரின் கூற்றை மறுத்துக் கடவுள் உண்டு என்று நிறுவித் தங்கள் கொள்கைகளை வலியுறுத்துகின்றன. கடவுள் உண்டு என்பதைப் பெரும்பாலும் சைவ சித்தாந்தம் அனுமான அளவையாலும் உரையளவையாலும் நிரூபிக்கிறது. கடவுளின் தன்மைகள் தடத்த இலக்கணம், சொரூப இலக்கணம் என்ற வகையில் விளக்கப் பெறுகின்றன. இறைவனின் பொதுத் தன்மைகள் தடத்த இலக்கணமாகும்.

அவற்றைக் கீழ்வருமாறு குறிப்பிடலாம். 
1. இறைவன் தோற்றமும் அழிவும் இல்லாதவன். அதாவது பிறப்பு, இறப்பு இல்லாதவன்.

2. உயிர்களைப் போல் மலங்களினால் என்றைக்கும் பிணிக்கப் படாதவன். 

3. இறைவன் ஓர் உருவமாகவோ, ஒரு பொருளாகவோ விளங்காது அதிசூட்சுமப் (உருவமற்ற) பொருளாக விளங்குபவன். 

4. படைத்தல் (உயிர்களை), காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையும்     அவன் செய்கின்றான். அதைத் திருவிளையாடல் என்று குறிப்பிடுவர். மேலும் மறைத்தல், அருளல் என்ற இருதொழில்களை உயிர்களுக்கு அருளின் பொருட்டுச் செய்கின்றான். உயிர்களின் அறிவை மறைப்பது ஆணவ மலமாகும். அந்த மறைக்கும் ஆற்றலைத் தூண்டி உலக இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்து தன்னைக் காட்டாது ஆணவ மலத்தின் சக்தி ஒடுங்க உயிர்களை அனுபவிக்கச் செய்வது மறைத்தலாம். அருளல் என்பது ஆணவமலம் அடங்க அடங்க உயிர்களை அருளை நோக்கி வரச்செய்தல் ஆகும். 

5. அவ்வாறு தொழில்களைச் செய்யும்போது தான் தனித்து நின்றும், உயிர்களோடு உடனாக நின்றும் செய்கின்றான். 

6. குறிப்பிட்ட உருவம் இல்லாதவன். தன் தொழில்களைச் செய்ய, உயிர்களுக்கு அருள் வழங்குதற்கு ஏற்ப வேண்டும் வடிவங்களை எடுத்துக் கொள்வதும் உண்டு. அவ்வாறு உருவம் எடுப்பது உயிர்களுக்கு உதவும் பொருட்டே ஆகும். 

7. இறைவனின் உருவத்தைத் திருமேனி என்று கூறுவர். இவை மூன்றாகும். அருவம், உருவம், அருவுருவம் என்பவை அவை. அருவம் என்பது கண்களுக்குப் புலப்படாதது. அவ்வாறு புலப்படாத சக்தியாய் நின்று இறைவன் உயிர்களுக்கு அருள்புரிகின்றான். உருவம் என்பது கண்களுக்குப் புலப்படுவது; உயிர்களுக்கு ஞானம் தருகின்ற பொழுது ஞானாசிரியர் வடிவில் தோன்றி அருள்புரிவது. அருவுருவம் என்பது புலப்பட்டும் புலப்படாதும் நிற்பது. அதாவது நம் போன்றவர்களுக்குப் புலப்படாது ஞானிகளாகிய உயிர்களுக்குப் புலப்படுகின்ற திருமேனி. இவ்அருவுருவவடிவத்தை அறிவுறுத்துவதற்குத் திருக்கோவில்களில் இலிங்கவடிவம்     அமைந்துள்ளது.

பொதுவாக, இறைவன் உருவமில்லாது இருப்பதுதான் அடிப்படை இலக்கணமாகும். தன் பொருட்டன்றி உயிர்களுக்கு அருள் தருவதற்காகவே இவ்வடிவத்தைப் பெறுகின்றான். இவ்வாறு என்றும் உள்ளவனாய், பிறப்பு இறப்பு அற்றவனாய், தனக்கென உருவம் அற்றவனாய், உயிர்களுக்கு அருளும் பொருட்டு மூவகைத் திருமேனிகளைக் கொண்டவனாய், ஐந்து தொழில்களைச் செய்கின்றவன் இறைவன் ஆவான் என்பது இதுவரை கூறப்பெற்றது.

இறைவன் குணங்களாக எட்டினைக் குறிப்பிடுவர். அவை 
1) தன்வயத்தனாதல் : சுதந்திரம் உடையவனாய் விளங்குதல். அதாவது பிறர் வயப்பட்டுச் செயல்புரியாது அனைத்திலும் சுதந்திரமுடையன் ஆதல். 

2) இயற்கை உணர்வினன் ஆதல் : அனைத்தையும் தானே அறியும் தன்மை உடையவன் ஆதல். 

3) முற்றுணர்வினன் ஆதல். ஒருகாலத்தில் அனைத்துப் பொருள்களையும் அறிந்து நிற்றல். அதாவது ஒவ்வொரு பொருளையும்ஒ வ்வொன்றாக அறியாமல் எல்லாப்பொருள்களையும் ஒரே நேரத்தில் அறிதல்.

4) அளவிலா ஆற்றல் உடையவன் ஆதல் : எச்செயலையும் எக்காலத்தும் செய்ய  வல்லமை உடையவன் ஆதல். 

5) வரம்பிலா இன்பம் உடையவன் ஆதல் : பேரின்பம் உடையவனாய் விளங்குதல். 

6) பேரருள் உடையவன் ஆதல் : பயன் கருதாது அருள்வழங்கும் தன்மை உடையன் ஆதல். 

7) இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல் : பாசம் என்னும் கட்டுக்குள் இறைவன் சேர்தலில்லை. 

8) தூய இயல்பினன் ஆதல்: பாசம் சாராத காரணத்தால் குற்றங்களுக்குரிய உடம்பு இல்லாது தூய உடம்பை உடையவன் ஆதல். 

இறைவன் இவ்வாறு எட்டுக்குணங்களை உடையவன். அவன் அருள் புரிகின்ற பொழுது சக்திநிலையில் அருள் புரிகின்றான் என்பது சைவ சித்தாந்தக் கொள்கையாகும். இச்சக்தியைத்தான் பெண் வடிவமாகச் சைவ சித்தாந்தம் கொள்ளுகிறது. ஆனால் இறைவன் வேறு, சக்தி வேறு அல்ல. இறைவன் ஒருவன் என்றாலும், சிவம், சக்தி என்ற இரு தன்மைப்பட்ட நிலைகளில் நின்று முன்குறித்த ஐந்து தொழில்களைச் செய்கின்றான். இதற்கு உவமை சூரியனும், சூரியஒளியும் ஆகும். இந்தச் சக்தியின் மூலமாக இறைவன் அருளுகின்ற போது அருளவேண்டிய உயிர்களுக்கு ஏற்ப அருளுகின்றான். இவ்வாறு சைவசித்தாந்த தத்துவக் கொள்கையில் இறைவனைப் பற்றிய பொது, சிறப்புக் கொள்கைகள் கூறப் பெறுகின்றன. இத்தகைய முறையில் சைவசித்தாந்தத்தில் பதி பெறும் முக்கியத்துவம் தொடர்பாக அறியலாம்.

No comments:

Post a Comment