Wednesday, June 29, 2016

அரிஸ்டோடில் கூறும் ஆட்சி முறை



          






அரிஸ்டோடில் இவர் எதன்ஸ் நகருக்கு அண்மையில்Stagira என்ற ஊரில் கி.மு 384ஆம்ஆண்டு பிறந்தார்.இவரின் நாட்டம் அதிகமாக சமூகத்துறைகளில்காணப்பட்டதுஇவர் பிளேட்டோவின் மாணவராகசேர்ந்து அவரின் பள்ளியில் கல்விப் பயின்றார்.அரிஸ்டோடில் பிளேட்டோவை பின்பற்றி தனதுகருத்துக்களை முன்வைத்தாலும் பல இடங்களில்பிளேட்டோவின் சிந்தனையில் இருந்து விடுபட்டுச்செல்கின்றார்அரிஸ்டோடில் அரசியல்,பொருளாதாரம்,சமூகம்,மெய்யியல்போன்றத்துறைகளை ஆராய்ந்து கருத்துக்கள் தெரிவித்துள்ளார்கிரேக்கசிந்தனையாளராக காணப்படும் இவரின் அனேகமானக் கருத்துக்கள் கிரேக்கத்தைமையமாகக் கொண்டே பின்பற்றப்பட்டதுஎனினும் தற்காலப் பொறுத்தப்பாட்டின்அடிப்படையில் பார்த்தால் அரிஸ்டோடிலின் கருத்துக்கள் காலம் கடந்தவையாகவேகாணப்படுகின்றனஇதனடிப்படையில் அரிஸ்டோடில் கூறும் ஆட்சிமுறைகளையும் அதன் தற்காலப் பொருத்தப்பாட்டினையும் பகுப்பாய்வுசெய்துபார்ப்போம்.

            அரிஸ்டோடிலை பொறுத்தவரை அவர் 170ற்கும் மேற்பட்ட நூல்களைஎழுதியுள்ளார்அதில் அவர் எழுதிய 'அரசியல்என்ற நூல் முக்கியமானதாகும்.தனது அரசு பற்றிய கருத்துக்களை கூறும் நூலாக இந்நூல் காணப்படுகின்றது.இவரின் குரத்துப்படி 'மனிதன் ஓர் அரசியல் பிராணிஎன்கின்றார்மேலும் இவர்சுமார் 158 அரசியல் யாப்புக்களை பகுப்பாய்வு செய்து அதன் மூலம் பெற்ற அறிவைக்கொண்டு அரசியலயாப்புக்களை வகைப்படுத்தினார்இதனை அடிப்படையாகக்கொண்டு ஆட்சி முறைகளையும் வகைப்படுத்திக் காட்டினார்இவ்வகைப்பாட்டில்முக்கிய இரண்டு அம்சங்கள் காணப்படுகின்றனஒன்று அதிகாரத்தைவைத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை இரண்டாவது அரசின் இயல்புஎன்பனவாகும்


     
இவர் 'அரசியல்என்ற நூலில் அரசுப்பற்றிக்குறிப்பிடுவதைவிட அவர் இலட்சிய அரசு என்பதனைஉருவாக்கி காட்டுவதற்கோ அரசியல் தத்துவம் ஒன்றினைஉருவாக்கி காட்டுவதற்கோ முற்பட வில்லைஅரசியல்யாப்புக்களை ஆராய்ந்து அரசின் குறைப்பாடுகளைஎடுத்துக்காட்டி அவற்றினை நிவர்த்தி செய்வதற்காக என்னசெய்யலாம்நிவர்தி செய்வதற்கான வழியினை அரசுஎவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும்போன்றஅறிவுரைகளாக 'அரசியல்என்ற நூலினைஎழுதியிருக்கின்றார்

            அரிஸ்டோடில் குறிப்பிடுகின்றார் சமுதாயஒழுங்குப்படுத்தல்கள்தான் மனிதனுக்கு நற்பண்புகளை புகட்டவேண்டும்இல்லாவிட்டால் மனிதன் விலங்கினங்களுள் மிகவும் மோசமான விலங்காகமாறிவிடுவான் என்கின்றார்இவ்வாறு மனிதனை சட்டத்தினூடக கட்டுப்படுத்த ஓர்அரசு அவசியமானதாகும்அரசு என்பது குடும்ப அமைப்பின் வளர்ச்சியாகும் எனஅவர் குறிப்பிடுகின்றார்அதாவது குடும்பம் விருத்தியடைந்து குலமாக மாறிகுலங்கள் விருத்தியடைந்து சமூகங்களாக மாற்றமடைந்து பின்னர் அவை கிராமம்நகரங்களாக வளர்ச்சியடைந்து நகர அரசுகளாக மாற்றமடைந்தன என அவர்குறிப்பிடுகின்றார்இதனூடாக அவர் அரசு என்பது சிறிய அலகில் இருந்தே தோற்றம்பெற்றதாகும் என்கின்றார்குடும்பத்திலிருந்து அரசு தோன்றினாலும் ஒரு வீட்டில்முதன்மை வகிப்பது ஆண்கள் என்ற அடிப்படையில் அரசிலும் அரசசெயற்பாடுகளிலும் பங்குக்கொள்வது ஆண்களாகவே இருக்க வேண்டும்பெண்கள்அடிமைகள் அவர்கள் அடக்கி ஆளப்பட வேண்டியவர்கள்இதனால் பெண்கள்அரசியலில் ஈடுப்பட தகுதியற்றோர் என்று குறிப்பிடுகின்றார்இவ்வாறு ஆண்களேஆளத்தகுதியுடையோர் என்று கூறும் அரிஸ்டோடில் ஆட்சி முறைகளைவகைப்படுத்தி காட்டினார்இவரின் வகைப்பாட்டில் இரண்டு விதமான தன்மைகள்காணப்பட்டதுஒன்று அதிகாரத்தை வைத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கைஇரண்டாவது அரசின் இயல்பு

ஆள்வோரின் எண்ணிக்கை         நல்லாட்சி                  தீயாட்சி
ஒருவர்                                                 மன்னராட்சி         வல்லாட்சி
சிலர்                                                உயர் குடியாட்சி               சிறு குழுவாட்சி
பலர்                      மிதமான குடியாட்சி     மக்களாட்சி

            மேற்குறிப்பிட்ட பாகுப்பாட்டினடிப்படையில் ஆளுவோரின் எண்ணிக்கையைஅடிப்படையாகக் கொண்டு அவை நல்லவையாகவும் தீமையாகவும் அமையும்சந்தர்பங்களை எடுத்துக்காட்டி  விளக்குகின்றார்இங்கு இவர் குறிப்பிடும்ஒருவராட்சியானது  மனித சமூகமானது தோன்றிய காலக்கட்டத்தில் அவர்களைஆட்சி செய்வதற்கு ஒருவர் தேவைப்பட்டான் அவனே மன்னாக காணப்பட்டான்.மன்னராட்சியில் மன்னனானவன் நீதியாகவும் நேர்மையாகவும் பொதுநலநோக்கிலும் செயற்படும் போது அவ்வாட்சியானது சிறப்பானதாக அமையும்.இம்மன்னராட்சியில் நீதி நேர்மை அற்றுப்போய் அநீதியான செயல்கள் இடம்பெறும்போது வல்லாட்சியாக மறுகின்றது என்று குறிப்பிடுகின்றார்

            இவ்வாறாக வல்லாட்சி நிலைப்பெறும் போது மக்கள் அடிமைகளாககாணப்படுவார்கள்பின்னர் மக்கள் தம்மை அடிமைத்தலையிலிருந்து மீட்பதற்குசிறு குழுக்களாக மாறி ஆட்சியை மாற்றி சிறு குழுக்களின் ஆட்சியைகொண்வவருவார்கள்இது ஆரம்பத்தில் உயர் குடியாட்சி பண்பை கொண்டிருக்கும்.அவ்வாறு காணப்படுமிடத்து அது நன்மையானதாக காணப்படும்பின்னர் உயர்குடியாட்சிக்குள் தோன்றும் சில முரண்பாடுகளினால் பிரபுக்களின் ஆட்சி ஏற்பட்டுஅது சிறு குழுவாட்சியாக மாற்றமடையும்அது தீமையானதாக அமைந்துவிடும்.

            இவ்வாறு பிரபுக்களின் ஆட்சியில் ஊழல் அதிகரிக்க அதனைமாற்றும்நோக்கில் பல மக்கள் இணைந்து அதனை மாற்ற முட்படுவர் இது பலராட்சியாகமாற்றமடைந்து முதலில் மிதமான குடியாட்சியாக காணப்படும்பின்னர்குடியாட்சியில் ஏற்படும் குலப்பம் காரணமாக மக்களாட்சி ஏற்படும் இதுசிறப்பானதாக அமையாது என்று கூறுகின்றார்அரிஸ்டோடில் மக்கள் அனைவரும்ஆளுவதற்கு ஏற்றவர்களல்ல என்கின்றார்இவ்வாறு தனது ஆட்சி முறைபற்றிகுறிப்பிடும் அரிஸ்டோடில் அறிவுடையோரே ஆளுதல் வேண்டும் அறிவற்றோர்அடக்கி ஆளப்படுதல் வேண்டும் என கருதுகின்றார்அறிவு என்பது பிறப்பினாலேஏற்படும் ஒன்று எனக்கருதும் அரிஸ்டோடில் அறிவற்றோர் ஆளுவதற்குதகுதியற்றோர் என்று குறிப்பிடுகின்றார்அறிவற்றோர் அடங்கிச் செல்லமறுக்கின்றபோது அவர்களுக்கு எதிராக அறிவுடைய வர்க்கம்  போர் செய்யவேண்டும் என்கின்றார்இவ்வாறு அரிஸ்டோடில் கூறும் கருத்துக்களைதற்காலத்துடன் தொடர்பு படுத்தி பார்ப்போம்.

            அரிஸ்டோடில் குறிப்பிடும் ஆடசியாளரின் எண்ணிக்கையையும் அதன்தன்மையினையும் பொருத்து நன்மையானவை தீமையானவை என வகைப்படுத்திக்காட்டுகின்றார் ஆனால் தற்காலத்தை பொருத்தவரை உலக நாடகள் அனேகமாகஜனநாயக ஆட்சிமறையையே பின்பற்றுகின்றனஇதனடிப்படையில் தற்காலஉலகில் ஆட்சிமுறையானது ஜனாதிபதித்துவ ஆட்சிமந்திரிசபை அட்சி முறை,கலப்பு ஆட்சி முறைகூட்டுக்குழு ஆட்சி முறை என்பனவே காணப்படகின்றன.இதற்கு உதாரணமாக முறையே ஐக்கிய அமெரிக்காபிரித்தானியாபிரான்ஸ்,சுவிஸ்சர்லாந்து என்பவற்றை குறிப்பிடலாம்இதனுடன் ஒருவராட்சிசிலராட்சி,பலராட்சி அதன் நன்மை தீமை என்பவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒருவராட்சிக்குஇடமே இல்லை எனலாம்ஏனெனில் மக்கள் அனைவரும் கூடி தங்களுக்கானஆடசியை தாங்களே அமைத்துக் கொள்கின்றனர்இதுவே ஜனநாயகமாகும்இதன்போது தனிநபர் ஒருவரின் ஆட்சியின் கீழ் மக்கள் அடங்கி ஒடுங்கி காணப்படுவதுசாத்தியமற்ற ஒன்றாகும்

            அரிஸ்டோடில் குறிப்பிடுவது போன்று ஒருவராட்சியில் மன்னராட்சிநல்லாலட்சியாயினும் அது வரலாற்றுக் காலங்களில் தோல்வியுற்ற ஓன்றாகவேகாணப்படுகின்றதுஅனேகமான மன்னர்கள் அதிகாரத்திற்கு வந்ததும் அதனைவல்லாட்சியாகவே பயன் படுத்தினர்இதனால் மக்கள் போராட்டங்களில்ஈடுப்பட்டனர்குறிப்பாக 16ஆம் லூய் மன்னனுக்கு எதிரான போராட்டத்தைகுறிப்பிடலாம்பிரித்தானியாவை பொருத்தவரை படிபடியாக மன்னனின்அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பின்னர் பாராளுமன்னத்திடம் அதிகாரங்கள்ஒப்படைக்கப்பட்டனஇருப்பினும் இன்றும் சில நாடுகள் மன்னராட்சி முறையைநடைமுறையில் கொண்டள்ளனஅதற்கு உதாரணமாக பிரித்தானியாஜப்பான்போன்றவற்றை குறிப்பிடலாம்ஆனால் அரிஸ்டோடில் குறிப்பிடவது போன்றுஅதிகாரம் மிக்க மன்னராட்சி என்று குறிப்பிட முடியாதுபெயரளவிலேயேமன்னராட்சி காணப்படுகின்றது எனலாம்அதுவும் சம்பிரதாய கடமைகளுக்குமட்டுமே பயன்படுத்தப் படுகின்றது.  

            அவர் குறிப்பிடும் வல்லாட்சியை பொருத்தவரை இன்றைய உலகில்அவ்வாறு தோன்றுவது குறைவாகவே காணப்படுகின்றது எனலாம்காரணம்அனேகமான நாடுகள் அரசியல் யாப்புக்களைக் கொண்டு காணப்படுகின்றன.ஆனாலும் அதையும் தாண்டி சிலசந்தர்ப்பங்களில் இவ்வாரன வல்லாட்சிமுறைதோற்றம் பெற்றுவிடுவதுண்டுபின்னர் மக்கள் இதனையெதிர்த்துபோராடவேண்டியுள்ளதுஇதற்கு உதாரணமாக லிப்யாவை குறிப்பிடலாம்

            அரிஸ்டோடில் குறிப்பிடும் சிலராட்சியில் மிதமான குடியாட்சியை இன்றுகாண்பது கடினமாக உள்ளதுமிதமான குடியாட்சி என்று அவர் குறிப்பிடுவதுநல்லாட்சியாக காணப்படும் என்கின்றார்அதன் நடைமுறையினை காண்பதுகடினம்இருப்பினும் இன்றும் சில நாடுகள் இவ்வாரான ஆட்சிமுறைக்குமறைமுகமாக உட்பட்டிருக்கின்றுது  எனலாம்குறிப்பாக ஆட்சியில் இருப்போரின்குடிகள் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டு போகும் போது அங்கு உயர்குடியாட்சி போக்கே காணப்படும்இருந்தாலும் இதனை நன்மையானதாக கருதமுடியாதுஇருப்பினும் இது நடைமுறைக்கு சாத்தியமாகத ஒன்று ஏனெனில்காலத்துக்கு காலம் ஏற்படும் தேர்தலின் மூலம் ஆட்சியை மாற்றக் கூடியதாகஇருக்கும்.  சிறு குழுவாட்சியை பொருத்தவரை நேரடியாக அதன் தன்மையை காணமுடியாவிட்டாலும் இன்றைய ஜனநாயக நாடுகளிலும் மறைமகமாக இது தனதுதாக்கத்தை செலுத்துகின்றது எனலாம்அதாவது தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களைக் கொண்டே ஆட்சி நடாத்தப்படுகின்றதுஅங்குஒருகுழுவே ஆட்சி கருமங்களில் ஈடுப்படுகின்றதுமீண்டும் அடுத்த தேர்தல் வரும்வரை அக்குழுவே ஆட்சி கருமங்களை செய்கின்றதுஇவ்வாறு பார்க்கும் போதுஅங்கு சிறுகுழுவாட்சியே காணப்படுகின்றதுஉண்மையில் இது தீமையானதுதான்இருப்பினும் அக்குழுவானது சர்வதிகாரப் போக்கை பின்பற்றுமானால் அதனைதகர்தெறியக் கூடிய சக்தி மக்களிடமுண்டு

            பலர் ஆட்சியில் ஈடுப்படும் போது அங்கு மிதமக குடியாட்சி நன்மையானதாககாணப்படும் என்கின்றார்ஆனால் இன்றைய நவீன ஜனநாயக முறைக்கு இதுசாத்தியப்படாத ஒன்றுமிதமன குடியாட்சி காணப்படுமானால் அங்கு மக்கள்கருத்திற்கு இடமளிக்கப்படமாட்டாதுஇது மக்களாட்சிக் கோட்பாட்டிற்குஏற்றதல்லஅரிஸ்டோடில் குறிப்படுகின்றார்  மக்களாட்சி (னுநஅழஉசயஉல)தீமையானது என்றுஇவ்விடத்தில் அவர் வாழ்ந்த காலசூல்நிலையே கருத்தில்கொள்ளப்பட வேண்டும்ஏனெனில் 'அறிவுடையோர் மட்டுமே ஆளுதல் வேண்டும்என்றதனடிப்படையில்'  அவர் கருத்துக்களை முன்வைத்துள்ளார்இதனால்தான்சிலராட்சியே சிறந்தது என்றும் மக்களாட்சி தீமையானது என்றும் குறிப்பிடுகின்றார்.இருப்பினும் சிலராடசியில் அதிகாரங்கள் துஷபிரயோகம் செய்யப்படுவதனால்மக்களாட்சியே சிறப்பானது எனலாம்இது அரிஸ்டோடிலுக்குப் பின்னர் நேரடிமக்களாட்சி என்றடிப்படையில் கிரேக்கத்திலும் காணப்பட்டதுமக்கள் அனைவரும்ஓர் இடத்தில் கூடி முடிவுகளை எடுக்கும் தன்மை காணப்பட்டதுஇது பின்னர்இன்றைய நவீன ஜனநாயகமாக மாற்றமடைந்தது

            அரிஸ்டோடில் மக்களாட்சி தீமையானது என்று குறிப்பிடுவதற்குகாரணங்கள் உள்ளனஅதாவது மக்கள் எனும் போது அதில் பெண்கள்அடிமைகள,ஏழைகள்வர்த்தகர்தொழிலாளி போன்றோரும் உள்ளடங்குவர்ஆனால் இவர்கள்அரசியலில் பங்குப்பற்ற தகுதியற்றோர் என்றே அரிஸ்டோடில் கருதுகின்றார்.இருப்பினும் இன்றைய உலகில் மக்கள் அனைவரும் அரசியலில்பங்குப்பற்றுகின்றனர்குறிப்பாக அரிஸ்டோடில் குறிப்பிடும் வர்கத்தினர் என்றுயரும் புறந்தல்லப்படுவதில்லைஅதிலும் பெண்கள் இன்று அரசியலிலும் அரசியல்செயற்பாட்டிலும் பாரயளவு ஈடுபாடுகாட்டி வருகின்றனர். 'பெண்கள்ஆளப்பிறந்தவர்கள்என்ற கருத்து இன்று மேலோங்கி காணப்படுவதால் பலதுறைகளிலும் அவர்களின் செல்வாக்கு அதிகமாக காணப்படுகின்றதுகுறிப்பாகஇந்திய ஜனாதிபதிஇலங்கையின் முன்னால் ஜனாதிபதிஐக்கிய அமெரிக்காவின்இன்றை ராஜாங்க செயலாளர் போன்றோரை குறிப்பிடலாம்மேலும் அறிவு என்பதுகல்வி மற்றும் வாழும் சூழல் என்பவற்றிலும் தங்கியிருக்கின்றதுஆகவே இங்குஅரிஸ்டோடிலின் கருத்து தோல்வியடைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.இருப்பினும் இன்றைய மூன்றாம் உலக நாடுகளில் மக்களாட்சி தோல்வியுற்றஒன்றாகவே காணப்படுகின்றதுஏனெனில் அரசியல் அறிவு படைத்த மக்கள்குறைவாக காணப்படுகின்றமைசரியான தலைவர்களை தெரிவு செய்யமுடியாதுள்ளமைஆட்சியாளர்களுக்கான போதிய அனுபவம் இல்லாமை போன்றவற்றை குறிப்பிடலாம்எவ்வாறாயினும் மக்களாட்சியையே அனைவரும்விரும்புகின்றனர் என்பது பொதுவான உண்மை

            மேலும் அரிஸ்டோடில் குறிப்பிடுவது போன்று இன்றைய அரசுகளின்எல்லைகளோ அல்லது சனத்தொகையோ காணப்படுவது சாத்தியமற்ற ஒன்றாகும்.இவர் கூறும் வரையரைகள் ஒரு கிராமத்தை நிறுவகிப்பதற்கு ஏற்புடையதே அன்றிஓர் நாட்டை பொருத்தவரை சாத்தியமற்றதேஇதனோடு இன்று மக்களாட்சிகோட்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடக்கப்பட்டு வருகின்ற வேளையில்அரிஸ்டோடில் குறிப்பிடும் ஆட்சிமுறைகள் சாத்தியமற்ற ஒன்றேஇவர் தான்வாழ்ந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவகையிலேயே தனது கருத்தைமுன்வைத்துள்ளார்அகவே ஒப்பிட்டு பார்க்கும் போது இவர் கூறும் ஆட்சிமுறையானது தற்காலத்தில் பொருத்தப்பாடு குறைந்ததாகவே உள்ளது.        
  

No comments:

Post a Comment